இந்நிலையில், மணிமொழியானிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். இதில் தான் தாம்பரத்தில் சார்பதிவாளராக இருந்தபோது ரூ.300 கோடி மதிப்புள்ள நிலத்திற்கு, அடமான பத்திரத்தை நீக்கிவிட்டு, ஏற்கனவே கிரையம் செய்ததுபோல் போலி ஆவணங்களை சேர்த்ததாகவும், அதை வில்லங்க சான்றிதழில் திருத்தம் செய்ததாகவும் ஒப்புக்கொண்டுள்ளார். அப்போது சென்னையில், மாவட்ட நிர்வாக பதிவாளராக இருந்த ரவீந்திரநாத், 8 முறை வில்லங்க சான்றிதழில் திருத்தம் செய்ய அனுமதி அளித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ரவீந்திரநாத்திடம் போலீசார் விசாரித்து வந்த நிலையில், தற்போது அவர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவுசெய்யப்பட்டு, அந்த வழக்கில் கைது செய்யப்பட்டார். மேலும், தாம்பரத்தில் உள்ள நில மோசடி புகாரில் ரவீந்திநாத்துக்கு உடந்தையாக இருந்ததாக உதவியாளர் லதா நேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
The post போலியாக ரூ.50 கோடி மதிப்பு நிலம் பதிவு பத்திரப்பதிவுதுறை டிஐஜி ரவீந்திரநாத் மேலும் ஒரு வழக்கில் கைது: உதவியாளர் லதாவும் சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.