பெண்ணிடம் கந்துவட்டி கொடுமை வீட்டை பூட்டி வெளியேற்றிய அவலம்

விழுப்புரம், செப். 28: விழுப்புரம் அருகே பெண்ணிடம் கந்துவட்டி கொடுமையில் ஈடுபட்டு வீட்டை அடமானம் போட்ட வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் அருகே கண்ணப்பன்நகரை சேர்ந்தவர் ெகாளஞ்சி மனைவி எழிலரசி(50). இவர் சாலாமேடு பகுதியை சேர்ந்த சுந்தர் என்பவரிடம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ரூ.50,000 பணத்தை 10 பைசா வட்டிக்கு வாங்கியதாக கூறப்படுகிறது. மேலும் அதே மாதம் கண்ணப்பன்நகரை சேர்ந்த சுரேஷ் மனைவி புஷ்பாவிடம் ரூ.2 லட்சம் பணத்தை 10பைசா வட்டிக்கு வாங்கியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து கடந்த 3மாதங்களாக வட்டி கொடுக்கமுடியாததால் சுந்தர், புஷ்பா ஆகியோர் சேர்ந்து எழிலரசி மற்றும் அவரது கணவர் கொளஞ்சி, மகன் கமல்ராஜ் ஆகியோரை அவர்களது வீட்டிற்கு வரவழைத்துள்ளனர்.மேலும் அசலையும், வட்டியையும் கேட்டு திட்டி தாக்கினார்களாம்.

இந்த வட்டி, அசலை 10 நாட்களில் கொடுக்கவேண்டும் என்று கூறிய சுந்தர், எழிலரசிக்கு சொந்தமான கீழ்வீட்டை தன்னுடன் வேலைசெய்யும் கணேசன் பெயருக்கு ரூ.4 லட்சம் அடமானம் பத்திரம்எழுதி வாங்கியுள்ளாராம். அதேபோல் புஷ்பா மேல்வீட்டை ரூ.3 லட்சத்திற்கு எழிலரசியிடம் அடமானம் பத்திரம்எழுதி வாங்கிக்கொண்டாராம். தொடர்ந்து அசலையும், வட்டியையும் கொடுக்காததால் எழிலரசி குடும்பத்தினரை வெளியே தள்ளிவீட்டை பூட்டிவிட்டார்களாம். இதுகுறித்து எழிலரசி அளித்தபுகாரின்பேரில் சுந்தர்(58), கணேசன்(63), சுரேஷ் மனைவி புஷ்பா(30) ஆகியோர் மீது கந்துவட்டிகொடுமை, பெண்கள் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 6 பிரிவின்கீழ் தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தர், கணேசனை கைது செய்தனர்.

The post பெண்ணிடம் கந்துவட்டி கொடுமை வீட்டை பூட்டி வெளியேற்றிய அவலம் appeared first on Dinakaran.

Related Stories: