ஆண்டிபட்டி அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: 2பேர் கைது

தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருட்கள் விற்பனை செய்த ஆனந்த், ராமச்சந்திரன் ஆகியோரை போலீஸ் கைது செய்தது. கைதானவர்களிடம் இருந்து 1.250 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக உள்ள 2 பேருக்கு போலீஸ் வலை வீசி வருகின்றனர்.

The post ஆண்டிபட்டி அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: 2பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: