13 பயனாளிகளுக்கு வீடு கட்ட ஆணை

ஓசூர், செப்.24: ஓசூர் அருகே கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில், 13 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணைகளை எம்எல்ஏ வழங்கினார். ஓசூர் ஊராட்சி ஒன்றியத்தில், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், சேவகானபள்ளியில் 4 பயனாளிகளுக்கும், பெலத்தூர் ஊராட்சியில் 9 பயனாளிகளுக்கும், வீடு கட்டுவதற்கான ஆணைகள் வழங்கும் விழா நடந்தது. இந்நிகழ்ச்சியில் திமுக மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ கலந்து கொண்டு, திமுகவின் சாதனைகளை கூறி பயனாளிகளுக்கு ஆணைகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், ஓசூர் ஒன்றிய செயலாளர் கஜேந்திர மூர்த்தி, ஒன்றிய துணை செயலாளர் வீரபத்திரன், ரமேஷ், சேகர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலாஜி, சாந்தலட்சுமி, அரசு அதிகாரிகள் சிற்றரசு, சம்பங்கி, சித்தார்த்தன், ஊராட்சி மன்ற தலைவர்கள் மம்தா வெங்கடேஷ், முனிராஜ், துணை தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post 13 பயனாளிகளுக்கு வீடு கட்ட ஆணை appeared first on Dinakaran.

Related Stories: