முத்துமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா

 

கிருஷ்ணகிரி, செப்.17: கிருஷ்ணகிரியில் நடைபெற்ற முத்து மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கிருஷ்ணகிரி பாரதியார் நகரில், பழமை வாய்ந்த முத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக, நேற்று முன்தினம் கணபதி பூஜை நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலை அமைத்து, கலசங்களை வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து, புதிதாக அமைக்கப்பட்ட கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் கிருஷ்ணகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

The post முத்துமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா appeared first on Dinakaran.

Related Stories: