பாலியல் தொல்லை வழக்கில் 3 பேர் கைது

திருப்போரூர்: கேளம்பாக்கம் அருகே மாம்பாக்கம், சமத்துவபுரம் பகுதியில் வசித்து வரும் 14வயதுள்ள 9ம் வகுப்பு மாணவி ஒருவர், நேற்று முன்தினம் இரவு மாலை 7 மணியளவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக அங்குள்ள புதர் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த 3 பேர், அவரிடம் பேச்சு கொடுத்துள்ளனர். இதில் திடீரென ஒருவன் அப்பெண்ணின் பின்பக்கம் சென்று வாயில் துணியை வைத்து அழுத்திக்கொள்ள மற்ற இருவரும் அச்சிறுமியை தரதரவென இழுத்து சென்றுள்ளனர். பின்னர், 3 பேரும் சேர்ந்து அச்சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு தப்பினர். பின்னர் வெளியே ஓடிவந்த சிறுமி அலறியடித்து கூச்சல் போட்டார்.

சத்தம்கேட்டு ஓடிவந்த அப்பகுதி மக்கள், சிறுமியிடம் விசாரித்ததில் நடந்த சம்பவங்களை விவரித்துள்ளார். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் உருட்டு கட்டையுடன் 3 பேரையும் தேடி, ஒருவனை மட்டும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியை ஆம்புலன்ஸ் மூலம் ரத்தின மங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு, சிறுமியை பரிசோதனை செய்ததில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டது உறுதியானது. இவ்வழக்கு சிட்லபாக்கம் மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. ஆய்வாளர் கீதா வழக்குபதிவு செய்து மாம்பாக்கம் பகுதியை சேர்ந்த 3 பேரை கைது செய்து, அவர்கள் மீது சிறுமியை பலாத்காரம் செய்ததாக வழக்குபதிவு செய்து, சோழிங்கநல்லூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post பாலியல் தொல்லை வழக்கில் 3 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: