மத்திய பிரதேசத்தில் சோகம்: ஆட்டோ-லாரி மோதல்; 3 பெண் உள்பட 7 பேர் பலி


ஜபல்பூர்: மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டம் சிஹோரா-மஜ்கவான் சாலை நுஞ்சி கிராமத்தில் நேற்று லோடு ஆட்டோவும், லாரியும் மோதி கொண்டது. இதில் 3 பெண்கள் உள்பட 7 பேர் பலியானார்கள். 11 பேர் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்தவர்கள் உடல்களை பிரேத பரிசோதனைக்காவும், படுகாயமடைந்தவர்களை சிகிச்சைக்காகவும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் இறந்தவர்கள், படுகாமடைந்தவர்கள் விவரம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு முதல்வர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் மற்றும் மருத்துவ சிகிச்சையும் வழங்குவதாக அறிவித்துள்ளார்.

The post மத்திய பிரதேசத்தில் சோகம்: ஆட்டோ-லாரி மோதல்; 3 பெண் உள்பட 7 பேர் பலி appeared first on Dinakaran.

Related Stories: