காவல் நிலையத்தில் கழுத்தை அறுத்துக்கொண்டு ரவுடி தற்கொலை முயற்சி

துரைப்பாக்கம்: துரைப்பாக்கம், கண்ணகிநகரை சேர்ந்தவர் சிவகுமார் (28). இவர் மீது, அடிதடி, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இரண்டு நாட்களுக்கு முன், சிறையில் இருந்து ஜாமினில் வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மனைவி பிரியாவுடன் தகராறு செய்துள்ளார். தினமும் அடித்து உதைத்ததால் பிரியா நேற்று கண்ணகி நகர் போலீசில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் சிவகுமாரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். காவல் நிலையத்தில் விசாரணை நடத்திய போது சிவக்குமார் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கழுத்தை அறுத்து கொண்டார். பலத்த காயமடைந்த அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். இது குறித்து கண்ணகிநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவத்தால் காவல் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

The post காவல் நிலையத்தில் கழுத்தை அறுத்துக்கொண்டு ரவுடி தற்கொலை முயற்சி appeared first on Dinakaran.

Related Stories: