வாய்க்காலில் அடித்துச்சென்ற கடமான் சடலமாக மீட்பு

பவானி, செப். 18:அம்மாபேட்டை அருகே சின்னப்பள்ளம் பகுதியில் மேட்டூர் வலது கரை வாய்க்காலில் தண்ணீரில் இறந்த நிலையில், மிதந்து வந்த கடமானை கைப்பற்றி, சென்னம்பட்டி வனத் துறையினர் விசாரித்து வருகின்றனர். மேட்டூர் வலது கரை வாய்க்காலில், அம்மாபேட்டை அடுத்த சின்னப்பள்ளம் பகுதியில் உள்ள நேற்று சுமார் 3 வயதுள்ள, பெண் கடமான் உயிரிழந்த நிலையில் மிதந்து வந்தது. இதைப் பார்த்த அப்பகுதியினர், சென்னம்பட்டி வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

அங்கு சென்ற வனத்துறை ஊழியர்கள், கடமானின் உடலைக் கைப்பற்றி, வனத்துறை அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். கால்நடை மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர் உயிரிழப்பு குறித்த காரணம் தெரியவரும். இதுகுறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

The post வாய்க்காலில் அடித்துச்சென்ற கடமான் சடலமாக மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: