மேலும் பசுமை சூழல் உருவாக்குவதன் அவசியம், மரக்கன்று நட்டு பராமரித்து பாதுகாக்க வேண்டியது குறித்து கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் குப்பைகள் முழுமையாக அகற்றி மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து தூய்மையான திருவள்ளூர் என்ற இலக்கை அடைய அனைவரும் விழிப்புணர்வு பெற்று செயல்பட வேண்டும் என்று கலெக்டர் பிரபு சங்கர் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.இந்த நிகழ்ச்சியில் ஒரு பகுதியாக தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் சாலையோரங்கள் மற்றும் கொப்பைகள் கொட்டும் இடங்களில மரக்கன்றுகள் நடும் பணியை அவர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயக்குமார், திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தானம், சாந்தி, பட்டாபிராமபுரம் ஊராட்சி மன்ற தலைவர் தேவி பாஸ்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post திருத்தணி அருகே தூய்மை சேவை விழிப்புணர்வு நிகழ்ச்சி: கலெக்டர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.