பைக் மீது கார் மோதி தந்தை, மகன் படுகாயம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம், தொடுகாடு கிராமம், அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிரபு (40). இவர் நேற்று முன்தினம் தனது மகன் லோகேஸ்வரன் (15) என்பவரை உடல் நலக்குறைவு காரணமாக பைக்கில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அவர்கள் தொடுகாடு ஐடிஐ அருகே சென்று கொண்டிருந்தபோது அங்கு சாலையில் நின்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென பின்னோக்கி வேகமாக வந்தது.

அப்போது அந்த கார் பிரபு ஓட்டிச் சென்றபைக் மீது மோதியது. இதனால் பிரபு, லோகேஸ்வரன் ஆகிய 2 பேரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதில் அவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனைக் கண்ட அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் காயம் அடைந்த 2 பேரையும் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் 2 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

The post பைக் மீது கார் மோதி தந்தை, மகன் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: