சேரன்மகாதேவியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் உவரி கடலில் விஜர்சனம்

வீரவநல்லூர்,செப்.16: சேரன்மகாதேவி பஸ் நிலையம் அருகில் இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை வைக்கப்பட்டது. இந்த சிலைக்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இந்நிலையில் நேற்று விநாயகர் சிலையை விஜர்சனம் செய்ய உவரி கடற்கரைக்கு கொண்டு செல்லப்பட்டது. முன்னதாக விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் வக்கீல் பழனிகுமார், கூனியூர் மாடசாமி, இந்து மக்கள் கட்சி செல்வகுமார், ராதாகிருஷ்ணன், முருகன் நயினார், மகாராஜன், இசக்கிமுத்து மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

The post சேரன்மகாதேவியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் உவரி கடலில் விஜர்சனம் appeared first on Dinakaran.

Related Stories: