போதை பொருள் கடத்தலை தடுக்க மதுவிலக்கு போலீசார் வாகன தணிக்கை

சாத்தூர், செப்.19: சாத்தூர் மதுவிலக்கு பிரிவு காவல் துறை சார்பில் வாகனங்களில் தீவிர சோதனை நடைபெற்றது. வெளி மாநிலங்களில் இருந்து போலி மதுபானங்கள் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கையாக விருதுநகர் அரசு பேருந்து பணிமனை முன்பு தீவிர வாகன சோதனை நடைபெற்றது. இதில் கலால் உதவி ஆணையர் கணேசன், மதுவிலக்கு அமல் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம், அருப்புக்கோட்டை கோட்ட கலால் அலுவலர் சின்னத்துரை, சாத்தூர் மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் சித்ரகலா ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

The post போதை பொருள் கடத்தலை தடுக்க மதுவிலக்கு போலீசார் வாகன தணிக்கை appeared first on Dinakaran.

Related Stories: