ஜம்மு காஷ்மீரில் முதற்கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் 24 தொகுதிகளில் பரப்புரை நிறைவு

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் முதற்கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் 24 தொகுதிகளில் பரப்புரை நிறைவு பெற்றது. நாளை மறுநாள் ஜம்மு காஷ்மீரின் 24 தொகுதிகளில் முதற்கட்டத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் நடைபெறும் 24 தொகுதிகளில் 3 பெண்கள் உள்பட 219 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வாக்குப்பதிவுக்காக தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடு செய்துள்ளது. சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டப் பிறகு ஜம்மு காஷ்மீரில் முதல்முறையாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.

The post ஜம்மு காஷ்மீரில் முதற்கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் 24 தொகுதிகளில் பரப்புரை நிறைவு appeared first on Dinakaran.

Related Stories: