கரூர் – திருச்சி சாலையில் விபத்து அபாயம்; ராமானூர் பகுதியில் பேரிகார்டு வைக்கப்படுமா?

கரூர், செப். 12: கரூர் ராமானூர் வளைவு சாலை பகுதியில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கரூர்-திருச்சி சாலையில் தெரசா கார்னர் பகுதியில் இருந்து ராமானூர், பசுபதிபாளையம் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் ராமானூர், கொளந்தானூர் சாலையில் சென்று வருகிறது. கரூர் பகுதியில் இருந்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு செல்பவர்களும் இந்த சாலையில் செல்கின்றனர். இந்நிலையில், கொளந்தானுர் ராமானூர் இடையே வளைவு பாதை உள்ளது. மூன்று சாலைகள் சந்திக்கும் இடத்தில் அடிக்கடி வாகன விபத்துக்களும் நடைபெறுகிறது. இந்த பகுதியின் அருகிலேயே டாஸ்மாக் கடையும் செயல்படுவதால் வாகன ஓட்டிகள் வளைவு பாதையை கடந்து செல்ல மிகுந்த சிரமமடைந்து வருகின்றனர்.எனவே, வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் வளைவு பாதையோரம் பேரிகார்டு அல்லது வேகத்தடை அமைக்கப்பட வேண்டும். இதுகுறித்து, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

The post கரூர் – திருச்சி சாலையில் விபத்து அபாயம்; ராமானூர் பகுதியில் பேரிகார்டு வைக்கப்படுமா? appeared first on Dinakaran.

Related Stories: