ரூ.5,000 கோடி நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கை துரிதப்படுத்தவும், மனுதாரர்கள் மோசடி தொடர்பான ஆவணங்களை பொருளாதார குற்றப்பிரிவு விசாரணை அதிகாரியிடம் வழங்கவும் ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. இடைத்தரகர்களை கைது செய்து, சொத்துகளையும் பறிமுதல் செய்ய மதுரை பொருளாதார குற்றப்பிரிவுக்கு நீதிபதிகள் ஆணையிட்டனர்.