போடி பஸ் ஸ்டாண்டில் பூட்டிய கடைகளில் சிசிடிவி கேமராக்கள் திருட்டு

போடி, செப். 11: போடி பஸ் ஸ்டாண்டிற்குள் பூட்டிய கடைகளில் சிசிடிவி கேமராக்கள் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். போடி பஸ் ஸ்டாண்டிற்குள் 100க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளில் பாதுகாப்பிற்காக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் எம்.ஜி.ஆர் சிலை அருகே உள்ள பயணிகள் நிழற்குடையையொட்டி 8ம் நம்பர் எண் கொண்ட கடையில் இட்லி கடை வைத்து நடத்தி வரும் அன்பழகன், இரவு கடையடைத்து விட்டு வீட்டிற்கு சென்றவர் மறுநாள் கடையை திறக்க வரும் பொழு து கடைக்கு முன்பாக பொருத்தப்பட்டிருந்த இரண்டு சிசிடிவி கேமராக்களை திருடு போயிருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து இதே போல பல கடைகளில் கேமராக்கள் திருடு போனது. இதுகுறித்து அன்பழகன் உட்பட பல கடைக்காரர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post போடி பஸ் ஸ்டாண்டில் பூட்டிய கடைகளில் சிசிடிவி கேமராக்கள் திருட்டு appeared first on Dinakaran.

Related Stories: