கடன் தொல்லை ரயில்வே ஊழியர் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை

ஜோலார்பேட்டை: திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த சோமநாயக்கன்பட்டி ஊராட்சி, டி.வீரப்பள்ளி போயர் வட்டத்தை சேர்ந்தவர் சீனிவாசன்(63), ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். கடன் தொல்லையாலும், பல்வேறு உடல் பாதிப்புகளாலும் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை சீனிவாசன் தனது மனைவி ஆனந்தியிடம், மாத்திரை வாங்கி வருவதாக கூறிவிட்டு மொபட்டில் சென்றுள்ளார்.

பின்னர் சோமநாயக்கன்பட்டி ரயில்வே காவல் நிலையத்திற்கும், ஜோலார்பேட்டை ரயில்வே காவல் நிலையத்திற்கும் இடையே பைரவன் வட்டம் பகுதியில் மொபட்டை நிறுத்திவிட்டு, தண்டவாளத்தில் தலை வைத்து படுத்துள்ளார். அப்போது, பெங்களூருவில் இருந்து ஜோலார்பேட்டை வந்த வந்தே பாரத் ரயிலில் சிக்கி சீனிவாசன் உடல் சிதறி பலியானார்.

The post கடன் தொல்லை ரயில்வே ஊழியர் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: