ஆனால் அந்த ஆடையை அணிந்து நடிக்க சம்மதிக்கவில்லை. அப்போது அவர், ‘நான் இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர்’ என்று மிரட்டினார். ஒருகட்டத்தில் அவரை தள்ளிவிட்டு ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியே ஓடிவிட்னேன். பாலியல் ரீதியாக துன்புறுத்தி தாக்கினார். அங்கிருந்த எனது பாதுகாப்பு ஊழியர்களை உதவிக்கு அழைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
நான் ஒன்றும் பொய் சொல்லவில்லை; அவருடைய பெயரை வெளியே சொல்ல விரும்பவில்லை. அவருடைய குழந்தைகள் என்னைவிட சற்று இளையவர்களாக இருக்கலாம். அந்த தயாரிப்பாளரின் பெயரை நான் வௌியே சொன்னால், அவரது பிள்ளைகளும் கஷ்டப்படுவார்கள். சில வருடங்களுக்குப் பிறகு, நான் அவரை மீண்டும் சந்தித்தேன். அப்போது அவர் என்னிடம் அன்பாகப் பேசினார். எனக்கு ஒரு படத்தில் நடிக்கவும் வாய்ப்பளித்தார். ஆனால் அந்தப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டேன்’ என்றார்.
The post பாலியல் துன்புறுத்தல் கொடுத்த சினிமா தயாரிப்பாளரின் பெயரை சொன்னால் அவரது பிள்ளைகளின் மனசு கஷ்டப்படும்: பாலிவுட் நடிகை பகீர் பேட்டி appeared first on Dinakaran.