அந்த மனுவில், வழக்கில் தொடர்புகள் குறித்தும், யார் யாருக்கு நிதி சென்றுள்ளது, எங்கு முதலீடு செய்யபட்டுள்ளது என்பது குறித்து விசாரிக்க வேண்டியுள்ளதால், மூவரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என தெரிவிக்கபட்டுள்ளது. இந்த மனு நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற பொறுப்பு நீதிபதி மலர் வாலன்டினா முன்பு தேவநாதன் உட்பட 3பேரும் நேரில் ஆஜர்படுத்தபட்டனர். இதனையடுத்து நீதிபதி, மூவரையும் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க, பொருளாதார குற்றப்பிரிவுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.இந்தநிலையில் போலீஸ் விசாரணை முடிந்து இன்று மீண்டும் புழல் சிறையிலடைக்கப்பட்டனர்.
The post சென்னை மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதனின் நீதிமன்ற காவல் செப்டம்பர் 17ம் தேதி வரை நீட்டிப்பு appeared first on Dinakaran.