மதுராபுரி நடுநிலை பள்ளியில் மேலாண்மைக் குழு புதிய உறுப்பினர்கள் தேர்வு

 

துறையூர், செப்.2: துறையூர் ஒன்றியம் மதுராபுரியிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. மதுராபுரி ஊராட்சி மன்றத் தலைவர் தனலட்சுமி ராம்ராஜ் தலைமை வகித்தார். ஒன்றியகுழு உறுப்பினர் சுபாஷ் , ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் உமாபதி, பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் செல்வராணி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

இதையடுத்து பள்ளி மேலாண்மைக் குழுவுக்கு 24 உறுப்பினர்கள் தேர்வு செய்து, புதிய தலைவராக சுப்புலட்சுமியும், துணைத்தலைவராக தர்மலிங்கமும் தேர்வு செய்யப்பட்டனர்.இந்நிகழ்வில் மதுராபுரி கிராம நிர்வாக அலுவலர் சுந்தரராஜன் உள்பட பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். பள்ளி தலைமையாசிரியர் சாமிக்கண்ணு நன்றி கூறினார்.

The post மதுராபுரி நடுநிலை பள்ளியில் மேலாண்மைக் குழு புதிய உறுப்பினர்கள் தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: