மக்கள் குறைதீர் கூட்டத்தில் 468 மனுக்கள் பெறப்பட்டது

 

திருச்சி.செப்.17: திருச்சி மாவட்ட கலெக்டர் கூட்டங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பிரதீப் குமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், சாதிச் சான்றுகள், இதரச் சான்றுகள், குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை, அரசின் நலத் திட்ட உதவிகள், அடிப்படை வசதிகள், பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 468 மனுக்கள் பெறப்பட்டது.

இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். இந்நிகழ்வில், உதவி கலெக்டர் (பயிற்சி) அமித்குப்தா, மாவட்ட வருவாய் அலுவலா் ராஜலட்சுமி, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியா் செல்வம், மாவட்ட ஆட்சியாின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) சீனிவாசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலா் தவச்செல்வம், பழங்குடியினா் நலத்துறை திட்ட அலுவலா் விஜயபாஸ்கா் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனா்.

The post மக்கள் குறைதீர் கூட்டத்தில் 468 மனுக்கள் பெறப்பட்டது appeared first on Dinakaran.

Related Stories: