வாகன விபத்தில் புதுமாப்பிள்ளை உட்பட 3 பேர் பலி

புவனகிரி: கடலூர்-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் பரங்கிப்பேட்டை அருகே புதுச்சத்திரம் மேம்பாலத்தில் டயர் பஞ்சராகி டாரஸ் லாரி ஒன்று நேற்று நின்றது. டிரைவர் பஞ்சரான டயரை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது லாரியின் மீது, திண்டிவனத்தில் இருந்து காரைக்காலுக்கு கோழி இறைச்சி கழிவுகளை ஏற்றிச் சென்ற மினி டெம்போ பயங்கரமாக மோதியது. இதில் காரைக்காலை சேர்ந்த மினி டெம்போ டிரைவர் சையது முகமது (25), அதிலிருந்த முகமது ரியாஸ்(20) ஆகிய இருவரும் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா மேல்புத்தூரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(28), அறுவடை இயந்திர டிரைவர். இவர் ஒரு பெண்ணை காதலித்து கடந்த மே மாதம் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி நேற்று முன்தினம் இரவு, பைக்கில் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் அருகே எடப்பாளையம் கிராமத்தில் உள்ள அக்கா வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். வெம்பாக்கம்-அழிவிடைதாங்கி சாலையில் சென்றபோது, சாலையோரம் நிறுத்தியிருந்த டிராக்டர் மீது பைக் மோதியது. இதில் படுகாயம் அடைந்த கிருஷ்ணமூர்த்தி பரிதாபமாக இறந்தார்.

The post வாகன விபத்தில் புதுமாப்பிள்ளை உட்பட 3 பேர் பலி appeared first on Dinakaran.

Related Stories: