உடனே ஹேமலதாவும் எழுந்தார். இருவரும் சத்தம் போட்டபடி வெளியில் ஓடி வந்து விடுதி நிர்வாகியிடம் செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கேளம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதையடுத்து குமுதி குஸ்மாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து குமுதி குஸ்மாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். இதில் குமுதி குஸ்மா கடந்த சில மாதங்களாக ஒருவரை காதலித்து வந்ததாகவும், அவரிடம் தினமும் நீண்ட நேரம் பேசி வந்ததும் தெரியவந்துள்ளது. காதலில் ஏற்பட்ட பிரச்னையால் தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரது தோழிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
The post கேளம்பாக்கம் அருகே தனியார் விடுதியில் பெண் இன்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.