விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணியில் 3% இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். சர்வதேச, தேசிய அளவிலான விளையாட்டுகளில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்று வென்ற 100 வீரர், வீராங்கனைகளுக்கு அரசுப் பணி வழங்குவது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்துவது தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

The post விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: