சென்னையில் 4 பேரிடம் ஆன்லைன் மோசடி கும்பல் பணம் பறிப்பு..!!

சென்னை: சென்னை ராயபுரத்தில் எல் அன்ட் டி நிறுவனத்தில் பணிபுரியும் மீனாவிடம் ரூ.98,000 மோசடி செய்யப்பட்டுள்ளது. சுங்கத்துறை அதிகாரி என செல்போனில் பேசிய அவர், உங்களுக்கு ஒரு பார்சல் வந்திருக்கிறது என்று கூறியுள்ளார். பார்சலில் போதை பொருள் இருக்கிறது; கைதில் இருந்து தப்பிக்க உடனே 1 லட்சம் அனுப்புங்கள் என கூறி மிரட்டியுள்ளார். போலியான ஒரு FIR-ஐ வீடியோ கலீல் காட்டி மிரட்டி பணம் பறித்த மர்ம நபருக்கு போலீஸ் வலைவீசி வருகின்றனர். ஆன்லைனில் வியாபாரம் செய்தால் இரட்டிப்பு லாபம் என கூறி வியாசர்பாடியை சேர்ந்த சிவகாமியிடம் ரூ.89,000 பணம் பறிக்கப்பட்டுள்ளது. பூக்கடையைச் சேர்ந்த கௌதம் என்பவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் திருட்டு போனது.

The post சென்னையில் 4 பேரிடம் ஆன்லைன் மோசடி கும்பல் பணம் பறிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: