பச்சிளம் குழந்தை கொன்று வீச்சு

நெல்லை: நெல்லை மாவட்டம், கங்கைகொண்டானை அடுத்த இத்திக்குளம் பெருமாள் தெருவைச் சேர்ந்தவர் காளிராஜ். இவரது வீட்டில் மாட்டு தொழுவம் அமைத்து அங்கு மாடுகளை கட்டி வைத்து பராமரித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலையில் மாடுகளுக்கு வைக்கோல் போடுவதற்காக அவரது மனைவி தொழுவத்திற்கு சென்றுள்ளார். அப்போது தொழுவத்தில் ஒரு பச்சிளம் பெண் குழந்தை இறந்த நிலையில் கிடந்தது. அந்த குழந்தை பிறந்து ஒரு நாள் கூட ஆகியிருக்காது என கூறப்படுகிறது. தொழுவத்தில் குழந்தையின் தொப்புள் கொடி மற்றும் ரத்தகறை படிந்த ஒரு கத்தரிக்கோல் கிடந்தது. இதனால் அந்தக் குழந்தை தகாத உறவால் பிறந்திருக்கலாம். அதனால் அவமானம் கருதி யாரேனும் குழந்தையை கொன்று இங்கு வீசி சென்று இருக்கலாம் என்ற கூறப்படுகிறது.

The post பச்சிளம் குழந்தை கொன்று வீச்சு appeared first on Dinakaran.

Related Stories: