வேங்கைவயல் விவகாரம் 3 பேருக்கு குரல் மாதிரி சோதனை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் ஆதிதிராவிடர் மக்கள் பயன்படுத்தக்கூடிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரம் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி கண்டறியப்பட்டது. இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் ஏற்கெனவே ஒரு காவலர் உள்பட 2பேரிடம் குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, 31 பேரிடம் மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் தொடர்ச்சியாக வேங்கைவயலை சேர்ந்த மேலும் 3 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள கடந்த மார்ச் 25ம்தேதி நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் அனுமதி பெற்றிருந்தனர். இதன்படி, குறிப்பிட்ட 3 பேரையும் நேற்று காலை சென்னையில் உள்ள தடயவியல் ஆய்வகத்துக்கு சிபிசிஐடி போலீசார் அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவித்தன.

The post வேங்கைவயல் விவகாரம் 3 பேருக்கு குரல் மாதிரி சோதனை appeared first on Dinakaran.

Related Stories: