பள்ளி மாணவி கர்ப்பம் ஆசிரியர் மீது வழக்கு

ஊட்டி: நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்த 17 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமி, குன்னூர் அருகே தனியார் இசை கற்றுக் கொடுக்கும் மையத்தில் சேர்ந்து இசை கற்று வந்தார். இங்கு இசை ஆசிரியராக பணியாற்றி வந்த பிரசாந்த் செபாஸ்டின் சிறுமிக்கு பாலியல் ரீதியாக அடிக்கடி தொந்தரவு கொடுத்தாராம். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு தலைவலி மற்றும் வாந்தி ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து ஊட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி 9 வார கர்ப்பமாக இருப்பதாக உறுதி செய்தனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் குன்னூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் இசை ஆசிரியர் பிரசாந்த் செபஸ்டியன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பள்ளி மாணவி கர்ப்பம் ஆசிரியர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: