5 நொடி வாக்கு நம் நாட்டின் 5 ஆண்டு கால வளர்ச்சி: ஜி.கே.வாசன் பேட்டி

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் சென்னை ஆழ்வார்பேட்டை, பீமன்னா கார்டன் பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் நேற்று வாக்கு செலுத்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: வாக்களிப்பது என்பது நம்முடைய ஜனநாயக கடமை. உங்களுக்கு விருப்பமான சின்னத்தில் வாக்களிப்பது என்பது வெறும் 5 நொடிதான், ஆனால், அது நம் நாட்டின் 5 ஆண்டு கால வளர்ச்சி. அதை மனதில் வைத்துக்கொண்டு வாக்களிக்க வேண்டும். புதிய வளர்ச்சி திட்டங்கள் தொடங்கும் சின்னத்தை பார்த்து வாக்கு செலுத்துங்கள். புதிய வாக்காளர்கள் புத்துணர்ச்சியோடு வாக்களியுங்கள். அனைவரும் உங்கள் பணியை சரியாக செய்யுங்கள் என்றார்.

The post 5 நொடி வாக்கு நம் நாட்டின் 5 ஆண்டு கால வளர்ச்சி: ஜி.கே.வாசன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: