அரசியலமைப்பு சட்டப்படியே எஸ்.சி. எஸ்.டி. பிரிவுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது என மோடிக்கு தெரியவில்லை. இடஒதுக்கீட்டை ரத்து செய்ய மாட்டோம் என காங்கிரஸ் உறுதி தருமா என்று மோடி வரலாறு தெரியாமல் கேட்கிறார்.காங்கிரஸ் ஆட்சியில்தான் பட்டியல், பழங்குடியினர் இடஒதுக்கீடு அமலானது என்ற வரலாற்றை மோடி மறந்துவிட்டார். 1951-ல் காங்கிரஸ் ஆட்சியில்தான் ஒ.பி.சி. பிரிவுக்கு இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது என்பதை மோடி மறந்துவிட்டார். ஒ.பி.சி. பிரிவினருக்கு 27% இடஒதுக்கீட்டை கொண்டு வந்தது காங்கிரஸ் என்ற வரலாறு மோடிக்கு தெரியவில்லை. 2014 முதல் பா.ஜ.க. அளித்த வாக்குறுதி அனைத்தும் பணமின்றி திரும்பிய காசோலை போன்றது,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை தவறாக சித்தரித்து பிரதமர் மோடி பொய்யை பரப்பி வருவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் சாடியுள்ளார். மேலும் 50% இட ஒதுக்கீடு வரம்பு உயர்வு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
The post 2014 முதல் பா.ஜ.க. அளித்த வாக்குறுதி அனைத்தும் பணமின்றி திரும்பிய காசோலை போன்றது என்று ப.சிதம்பரம் விமர்சனம் appeared first on Dinakaran.