விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இயக்கப்பட்டு வந்த குகன் படகை ரூ. 35 லட்சம் செலவில் சீரமைக்க பூம்புகார் கப்பல் போக்கவரத்துக் கழகம் முடிவு செய்தது. அதன்படி அந்த படகு கடல் வழியாக சின்னமுட்டம் படகு கட்டும் தளத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு கரையேற்றப்பட்டு சீரமைப்பு பணிகள் நடந்தது. படகின் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததையொட்டி படகு புதுப்பொலிவுடன் கடலில் இறக்கப்பட்டது. பின்னர் குகன் படகு கடல் வழியாக கன்னியாகுமரிக்கு கொண்டு வரப்பட்டு பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக படகுத்துறையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இந்த படகு சில நாட்களில் வெள்ளோட்டம் விடப்பட்டு ஒரு வாரத்திற்கு பிறகு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு பயணிகளை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்படுகிறது.
The post பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்துக்கு சொந்தமான சுற்றுலா படகு ரூ.35 லட்சத்தில் சீரமைப்பு appeared first on Dinakaran.