இதில் ஹரிபிரசாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு பைக்கில் வந்த தி.நகர் பகுதியை சேர்ந்த பிரதீப்குமார் (23) படுகாயமடைந்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். பிரதீப் குமார் சிட்லபாக்கத்தில் உள்ள தனியார் வாட்டர் வாஷ் கடையில் வேலை செய்து வந்தார் எனவும், இரவு வேலை முடிந்து வீட்டிற்கு செல்லும்போது விபத்தில் சிக்கியதும் தெரியவந்தது. தகவலறிந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், உயிரிழந்த 2 வலிபர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
The post பைக்குகள் நேருக்கு நேர் மோதியதில் 2 வாலிபர்கள் பலி appeared first on Dinakaran.