அப்போது அவர் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள பிரச்னைகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துக் கூறி வாக்குகளை சேகரித்தார். குறிப்பாக மேட்டுப்பாளையம் பகுதியில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வரும் பிரச்னை காலங்காலமாக இருந்து வருவதாகவும் கண்டிப்பாக அந்த பிரச்னைக்கு தீர்வு காணப்படும் எனவும் வாக்குறுதி அளித்தார்.
ஓட்டேரியில் பல பகுதிகளில் மழைநீர் கால்வாய் முறையாக அமைக்கப்படவில்லை எனவும் அந்த பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் எனவும் மேலும் குறுகலாக உள்ள இடங்களில் கான்கிரீட் சாலைகள் அமைக்க வழிவகை செய்யப்படும் எனவும் வாக்குறுதி அளித்தார். இந்த வாக்கு சேகரிப்பின் போது திருவிக நகர் மேற்கு பகுதி செயலாளர் முகுந்தன், வட்ட செயலாளர் பாண்டியன் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், அதிமுகவினர் பெரும்பளவில் கலந்து கொண்டனர்.
The post ஓட்டேரியில் வீதி வீதியாக சென்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ராயபுரம் மனோவுக்கு பிரசாரம்: மேட்டுப்பாளையம் கழிவுநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என வாக்குறுதி appeared first on Dinakaran.