வெற்றிக்கு பின் சன்ரைசர்ஸ் கேப்டன் கம்மின்ஸ் கூறியதாவது: பஞ்சாப் பவுலர்கள் தொடக்கத்தில் சிறப்பாக பந்து வீசி நெருக்கடி ஏற்படுத்தினர். இருப்பினும் நாங்கள் 182 ரன் எடுத்து வெற்றிகரமாக காத்துக் கொண்டோம். இம்பேக்ட் பிளேயர் விதியால் பேட்டிங் பலம் ஆகிறது. அது சாதகமாக இருக்கிறது. நாங்கள் இந்த போட்டி முழுவதுமே பாசிட்டிவாக தான் இருந்தோம். 150 ,160 ரன் எல்லாம் அடித்தால் நிச்சயமாக 10க்கு 9 போட்டிகளில் தோல்வி அடைய தான் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. பவுலிங்கில் புதியபந்தை சிறப்பாக பயன்படுத்துவது தான் வெற்றிக்கு ஒரே வழி என்பதை அறிந்து கொண்டோம். புவனேஸ்வர் தொடர்ந்து ஸ்டெம்புகளை குறிவைத்து வீசி கொண்டு இருந்தார்.
அணியில் பல இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளதும் கொஞ்சம் சாதகமான விஷயமாக இருக்கிறது. ஷஷாங்க் -அசுதோஷ் சர்மா சிறப்பாக விளையாடினர். கடந்த வாரம் இருவரும் பிரமாதமாக செயல்பட்டதை பார்த்தேன். இதேபோன்று எங்கள் வீரர் நிதிஷ் குமார் ரெட்டியும் அபாரமாக ஆடினார். பந்துவீச்சிலும் 3 ஓவர் வீசினார்.நிச்சயமாக அது எங்களுக்கு நல்ல விஷயம் தான், என்றார். ஆட்டநாயகன் நிதிஷ்குமார் ரெட்டி கூறியதாவது: “இன்று எனது செயல்பாடு என்பது அணிக்கு மட்டுமல்லாது, தனிப்பட்ட முறையில் எனக்கும் பெரிய விஷயமாக அமைந்திருக்கிறது. நான் என்னை நம்ப வேண்டும், அணிக்காக நான் களத்தில் இருக்க வேண்டும் என்று என் மனதுக்குள் நான் சொல்லிக் கொண்டேன். பஞ்சாப் வேகப் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினர். எனவே சுழற்பந்து வீச்சாளர் வந்ததும் அடித்து ஆட ஆரம்பித்தேன். பேட், பவுலிங் என நல்ல பங்களிப்பு செய்ய விரும்புகிறேன். நான் இப்படி இருக்கத்தான் எப்பொழுதும் நினைக்கிறேன்” , என்றார்.
The post இதுபோல் ஆட்டத்தை தொடர விரும்புகிறேன்: ஆட்டநாயகன் நிதிஷ்குமார் பேட்டி appeared first on Dinakaran.