மேட்டூரில் பெண் துணை வட்டாட்சியர் தூக்கிட்டு தற்கொலை: மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெற்று வந்ததாக கணவர் தகவல்

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூரில் துணை வட்டாட்சியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மேட்டூர் துணை வட்டாட்சியராக நர்மதா பணிபுரிந்து வந்த நிலையில் அவரது கணவர் மணிகண்ட சபரி மேட்டூர் சார்ஆட்சியர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக உள்ளார்.

நர்மதா வீட்டில் தனியாக இருந்த போது மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு மனஅழுத்தம் இருந்ததாகவும் இதற்கு மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்ததாகவும் அவரது கணவர் மணிகண்ட சபரி தெரிவித்தார். எனினும் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணையை போலீசார் துரிதப்படுத்தி உள்ளனர்.

The post மேட்டூரில் பெண் துணை வட்டாட்சியர் தூக்கிட்டு தற்கொலை: மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெற்று வந்ததாக கணவர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: