இதையடுத்து, 2006 முதல் 2011 வரை அப்போதைய தமிழ்நாட்டின் துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் நெரிசலை குறைத்து சிரமமின்றி மக்கள் வந்து செல்லும் வகையில், நவீன பேருந்து நிலைய பணிகள் மேற்கொள்ள ரூ.18 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, பொதுப்பணித் துறையிடம் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஒப்படைத்தது. பின்னர், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பணிகள் தொடங்காமல் கிடப்பில் போடப்பட்டது. கடந்த 2020ம் ஆண்டு மண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, பேருந்து நிலையம் கட்டுவதற்கு உகந்த இடம் என சான்றிதழ் பெறப்பட்டது. இதையடுத்து, கடந்த சட்டமன்ற மானிய கோரிக்கையின்போது, மாமல்லபுரத்தில் ரூ.50 கோடி மதிப்பீட்டில் நவீன பேருந்து நிலையத்தின் கட்டுமான பணி பிப்ரவரி மாத இறுதியில் தொடங்கும் என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார். தற்போது, நவீன பேருந்து நிலையம் அமைய இருக்கும் இடத்தில் பொக்லைன் இயந்திரம் மூலம் வேலிகாத்தான் மரங்கள் உள்ளிட்ட செடி, கொடிகள் அகற்றி இடம் சமன்படுத்தப்பட்டு பல்வேறு அம்சங்களுடன் பேருந்து நிலையம் கட்டுவதற்கு தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில், இன்று மாலை மாமல்லபுரத்தில் ரூ.50 கோடி மதிப்பீட்டில் நவீன பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணியை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். இதில், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன், எம்எல்ஏ, பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர்.
The post மாமல்லபுரத்தில் இன்று மாலை ரூ.50 கோடியில் நவீன பேருந்து நிலையம் அமைக்கும் பணி: முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார் appeared first on Dinakaran.