எந்த இடத்தில் வேலை கிடைக்கிறதோ அந்த மொழியைக் கற்றுக்கொள்வது முக்கியம்: ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

சென்னை: எந்த இடத்தில் வேலை கிடைக்கிறதோ அந்த மொழியைக் கற்றுக்கொள்வது முக்கியம் என்று ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த ஒன்றிய அரசின் மெகா வேலைவாய்ப்பு விழா நிகழ்ச்சியில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார். ஒன்றிய அரசின் மெகா வேலைவாய்ப்பு விழா நிகழ்ச்சியில் பேசிய நிர்மலா சீதாராமன்; ஒன்றிய அரசு பணிகளுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிகமாக விண்ணப்பிக்க வேண்டும். ரோஸ்கர் மேளா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 553 நபர்களுக்கு பணி வழங்கப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசு பணிகளுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிகமாக விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் குறைவாக விண்ணப்பிப்பதால் காலி பணியிடங்களை நிரப்ப வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டிற்கு வேலைக்கு வருகின்றனர். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஒன்றிய அரசின் காலி பணியிடங்களுக்கு தேர்வை எழுதி வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எந்த பணிக்கு, எந்த ஊருக்கு செல்கிறோமோ அதற்கு தேவையான மொழியை கற்றுக் கொள்வது அவசியம் என்று கூறியுள்ளார்.

 

The post எந்த இடத்தில் வேலை கிடைக்கிறதோ அந்த மொழியைக் கற்றுக்கொள்வது முக்கியம்: ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன்! appeared first on Dinakaran.

Related Stories: