கடத்தூர், மார்ச் 21: கடத்தூர் பகுதிகளில் அரசு ஒப்பந்த பணிகளுக்கு அனுமதியின்றி மண் கடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தர்மபுரி மாவட்டம் கடத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒசஅள்ளி ஊராட்சியில் புதுபட்டி, பாசரபட்டி, பெருமாகோவில்பட்டி உள்ளிட்ட 7 சிறிய கிராமங்களை கொண்டுள்ளது. பெருமாள் கோவில்பட்டி முதல் பாசாரப்பட்டி வரையில் 3.5 கிலோ மீட்டர் தொலைவிற்கு ரூ.3.89 கோடி மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணிக்கு கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்து தற்பொழுது பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சாலை அமைக்கும் ஒப்பந்ததாரர், ஊராட்சி அனுமதியின்றி பல லட்சம் டன் செம்மண் எடுத்து சாலை பணிக்கு பயன்படுத்தி வருகின்றனர்.,
மண் கடத்தலை தடுக்க நடவடிக்கை
