×

டிரைவரை அடித்து கொன்ற வாலிபர் மீது குண்டாஸ்

 

ஈரோடு, ஆக. 4: ஈரோட்டில் டிரைவரை கட்டையால் அடித்து கொலை செய்த வழக்கில் கைதானவர், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். ஈரோடு வீரப்பன்சத்திரம் 16 எண் சாலை கரும்புகாட்டை சேர்ந்தவர் கண்ணன் (55). ஈரோடு செங்குந்தர் நகரில் உள்ள வாரி கேலண்டரிங் மில்லில் டிரைவராக பணியாற்றி வந்தார். கடந்த ஜூலை மாதம் 4ம் தேதி மில்லில் உள்ள ஒரு அறையில் முகத்தில் ரத்தக்காயங்களுடன் இறந்த நிலையில் கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஈரோடு வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து கண்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணையில், மில்லில் வார சம்பளத்தை வாங்கியதும், மில்லின் மற்றொரு டிரைவரான ஈரோடு பெரியசேமூர் டாக்டர்ஸ் காலனியை சேர்ந்த இக்பால் (31), என்பவருடன், மில்லில் ஒரு அறையில் இருவரும் மது அருந்தினர். இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பான பிரச்னை எழுந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த இக்பால் அங்கிருந்த மர கட்டையால் கண்ணன் முகத்தில் பலமாக தாக்கினார். இதில், கண்ணன் உயிரிழந்தார். இதையடுத்து இக்பாலை போலீசார் கைது செய்து, கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர். இக்பால் மீது ஏற்கனவே திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், இக்பாலை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட எஸ்பி கிரண் ஸ்ருதி, கலெக்டருக்கு பரிந்துரைத்தார். இதனை ஏற்ற கலெக்டர் கந்தசாமி, இக்பாலை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

அமராவதி தண்ணீர் திறப்பு இல்லை
ஆடி மாதத்தில் அமராவதி அணையில் இருந்து ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படும். அந்த நீரை புனிதமாகக் கருதி, நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி எடுத்து ஆற்றில் கரைத்து, அமராவதி அன்னைக்கு படைத்து, வழிபடுவது வழக்கம். இந்த ஆண்டு பருவநிலை மாற்றத்தின் தாக்கம் காரணமாக அமராவதி அணையில் போதிய அளவு நீர் சேமிக்கப்படவில்லை.

Tags : Kundas ,Erode ,Kannan ,Carmbugatai ,Wari ,Erode Sengundar ,
× RELATED திமுக-கொமதேக சார்பில் தீரன் சின்னமலை நினைவு தினம் அனுசரிப்பு