சென்னை: காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் செயல்பாடு வேதனையளிக்கிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 221ஆவது நினைவு நாளையொட்டி கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் செயல்பாடு வேதனையளிக்கிறது. தமிழ்நாட்டில் எந்த ஆட்சி நடந்தாலும் காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டும். தவெக அரசு செயல்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது.
தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை பெற இந்த அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்றே தெரியவில்லை. கர்நாடக அரசு அரசியல் கட்சிகளை மதிக்கிறது. காவிரித் தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசாக தவெக அரசு உள்ளது. என்ன நடவடிக்கை எடுப்பது என அவர்களுக்குத் தெரியவில்லை. கட்சி தொடங்கி இரண்டரை ஆண்டுகளில் ஆட்சிக்கு வந்த தவெகவுக்கு காவிரி பிரச்னை பற்றி முழுமையாக எதுவுமே தெரியாது; அனுபவம் இல்லாததால் மற்ற கட்சிகளின் கருத்துகளை தவெக அரசு கேட்டிருக்க வேண்டும்.
மூத்த சட்ட வல்லுநர்களுடனும் அனைத்துக் கட்சிகளுடனும் ஆலோசித்து காவிரி, மேகதாது விவகாரத்திற்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்று கூறினார்.
