×

கொளந்தானூர் அடுக்குமாடி குடியிருப்பு பயனாளிகள் பயன்பாட்டிற்கு வருவது எப்போது? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

 

கரூர், ஆக. 3: கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கொளந்தானூரில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கொளந்தானூர் பகுதியில் ஏற்கனவே பழுதடைந்த நிலையில் இருந்த அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் இடிக்கப்பட்டு புதிதாக அடுக்குமா கட்டிடம் கட்டும் பணி நடைபெற்றது.ஒரு ஆண்டுக்கும் மேலாக நடைபெற்று இந்த பணி தற்போது கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் உள்ளது. ஆனாலும், இதுநாள் வரை பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.

இதன் காரணமாக இதற்கான பயனாளிகள் இதனை பயன்படுத்திட முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என அனைவருக்கும் தெரியப்படுத்திட வேண்டும். மேலும், இந்த புதிய கட்டிட வளாகத்தை திறந்து வைத்து தேவையான பயனாளிகள் பயன்பெறும் வகையில் விரைந்து மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

 

Tags : Kolandhanur ,Karur ,Karur Corporation ,
× RELATED திருமணம், பண்டிகை, முக்கிய...