- கர்ப்பப்பை வாய்
- புற்றுநோய்
- தடுப்பூசி
- விழிப்புணர்வு
- முகாம்
- வேலாயுதம்பாளையம்
- தமிழ்நாடு அரசு சுகாதார துறை
- டி.என்.பி.எல் மெட்ரிக் மழலையர் பள்ளி
- ஓலப்பாளையம் தொடக்கப்பள்ளி…
வேலாயுதம்பாளையம், ஆக.1: டிஎன்பிஎல் மெட்ரிக் மழலையர் பள்ளியில் தமிழ்நாடு அரசு பொது சுகாதாரத் துறையின் சார்பில் HPV தடுப்பூசி மற்றும் கருப்பை வாய் புற்றுநோயை தடுக்கும் விதமாக பள்ளி மாணவிகளிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக ஓலப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் கணபதி நாராயணன் கலந்து கொண்டு HPV தடுப்பூசி மற்றும் கருப்பை வாய் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மாணவிகளிடம் எடுத்து கூறினார்.
இதில் சுகாதார ஆய்வாளர் கண்ணன், செவிலியர் கவிதா ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டு மாணவிகளுக்கு விழிப்புணர்வையும், தடுப்பூசியையும் வழங்கினர்.இதில் டிஎன்பிஎல் பள்ளிகளின் செயலாளர் மற்றும் தாளாளர் செல்வராஜ், பள்ளியின் தலைமை ஆசிரியை கீதா ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். விழாவில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாணவிகள் கலந்து கொண்டனர்.
