×

திமுக தலைவர் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் ஆதாரமில்லாமல் பேசுவதா? இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. காட்டம்

திருப்பூர்: திமுக தலைவர் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் ஆதாரமில்லாமல் பேசுவது ஏற்கத்தக்கதல்ல என திருப்பூர் எம்.பி.சுப்பராயன் கூறினார். திருப்பூர் எம்.பி சுப்பராயன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட பின்னரும் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசின் செயல் மிகவும் பொறுப்பற்றது.

காவிரி நீர் பங்கீட்டு விவகாரத்தில் தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி, அதில் தெரிவிக்கப்படும் கருத்துகளின் அடிப்படையிலும், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்துத் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே தற்போதைய அவசரத் தேவையாகும். இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர் நிர்மல்குமார் கர்நாடக முதல்வருக்கு திமுக தலைவர் கொடுத்த அழுத்தம் காரணமாகவே கர்நாடக அரசு தண்ணீர் தர மறுப்பதாக சுமத்தியுள்ள குற்றச்சாட்டு குறித்த கேள்விக்குப் பதிலளித்த சுப்பராயன் எம்பி, ஒரு பொறுப்புள்ள பதவியில் இருப்பவர், முறையான ஆதாரங்கள் இல்லாமல்,அரசியல் காரணங்களுக்காக இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. எந்தவொரு குற்றச்சாட்டாக இருந்தாலும் அதற்கு மறுக்க முடியாத ஆதாரங்கள் இருக்க வேண்டும். போகிறபோக்கில் பேசப்படும் குற்றச்சாட்டுகள் ஏற்கத்தக்கதல்ல என்று கூறினார்.

Tags : Minister ,Nirmal Kumar ,DMK ,India ,Kattam ,Tiruppur ,Subbarayan ,Minister Nirmal Kumar ,Cauvery Water Management Authority ,Tamil Nadu… ,
× RELATED கட்டப்பட்டு 26 ஆண்டுகள் நிறைவு குமரி...