×

வள்ளலார் பண்பாட்டு மைய பணிகள் நிறுத்தம் கடந்த அரசின் ரூ.100 கோடியிலான திட்டத்தை கைவிடுவது சிறப்பாகாது: முதல்வர் விஜய்க்கு காங்கிரஸ் மூத்த தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவுரை

 

சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வடலூர் நகரில் ஸ்ரீராமலிங்க சுவாமி திருக்கோயில் இருக்கிற இடத்தில் நடைபெற்று வந்த வள்ளலார் பண்பாட்டு மையத்தின் பணிகளை தமிழக அரசு நிறுத்திக் கொள்வதாக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. ஒரு நல்ல பணியை எதன் காரணமாக நிறுத்தினார்கள் என்பது தெரியவில்லை.

ஒரு கழிப்பறை கூட இல்லாமல் கரடுமுரடான கற்கள் சிதறி கிடக்கும் நிலையில், ரூ.100 கோடியில் ஒரு பன்னாட்டு மையம் அமைகிற போது எவ்வளவோ மாற்றங்களும் சிறப்புகளும் அங்கே நிகழும் என்றுதான் எதிர்பார்த்தோம். ஆனால், கடந்த அரசு கொண்டு வந்த திட்டத்தை அதே இடத்தில் அமைத்து மேலும் உலகத்தரத்திலான ஒரு ஆன்மிக நூலகத்தையும் மேம்படுத்த தமிழக முதல்வர் விஜய் முயற்சிப்பது தான் ஏற்புடையதாக இருக்குமே தவிர, ரூ.100 கோடி திட்டத்தை கைவிடுவது சிறப்பாக அமையாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

Tags : Vallalar Cultural Center ,Senior ,Congress ,K.S. Azhagiri ,Chief Minister ,Vijay ,Chennai ,Tamil Nadu Congress Party ,Tamil Nadu government ,Sri Ramalinga Swamy Temple ,Vadalur Nagar ,
× RELATED பீகாரின் பங்கிப்பூர் தொகுதி...