×

சென்னை மெட்ரோ ரயில் சேவை – ஜூலை மாதத்தில் புதிய உச்சத்தை தொட்ட பயணிகளின் எண்ணிக்கை

சென்னை: 2026-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் சென்னை மெட்ரோ ரயில்களில் மொத்தம் 1,06,37,647 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இது சென்னை மெட்ரோவின் பாதுகாப்பான மற்றும் நம்பகமான சேவைகளுக்கு மக்கள் அளிக்கும் வரவேற்பை காட்டுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் கூறி இருக்கிறது.

இது தொடர்பான அறிக்கையில் கடந்த ஜூலை 24, 2026 அன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 3,84,412 பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. வாட்ஸ்அப், பேடிஎம் மற்றும் ஃபோன்பே போன்ற டிஜிட்டல் கியூஆர் (QR) டிக்கெட் மற்றும் என்சிஎம்சி (NCMC) கார்டுகளைப் பயன்படுத்துபவர்களுக்கு 20% கட்டணத் தள்ளுபடி வழங்கப்பட்டு வருவதயும் மெட்ரோ ரயில் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொண்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் சேவை வரலாற்றில் முதன்முறையாக கடந்த ஆண்டு (2025) ஜூலை மாதம் தான் பயணிகளின் எண்ணிக்கை 1 கோடியைக் கடந்து (1,03,78,835 பயணிகள்) வரலாற்றுச் சாதனை படைத்தது. அதை தொடர்ந்து நடப்பாண்டு மார்ச் மாதத்தில் 1,01,97,604 பயணிகள், சென்னை மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தினர். இந்த நிலையில் மறுபடியும் இந்த ஜூலை மாதத்தில் 1,06,37,647 பயணிகள் எண்ணிக்கை மூலம், இதுவரை இல்லாத புதிய உச்சம் பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags : Chennai Metro Rail Service ,Chennai ,Chennai Metro ,Metro Rail Administration ,Metro ,
× RELATED தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இயல்பைவிட18 சதவீதம் குறைவு…