×

போலீஸ் பாதுகாப்புடன் நிலம் அளவீடு செய்யும் பணி

 

வேப்பனஹள்ளி, ஆக.1: கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அருகே அரியனப்பள்ளி குடியிருப்பு பகுதியில், சுமார் 40 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள வீடுகளுக்கு குடிநீர் வழங்குவதற்காக கட்டப்பட்டிருந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பழுதடைந்து காணப்படடது.  இதையடுத்து, புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்காக, பழைய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை இடித்து அகற்ற திட்டமிட்டனர். ஆனால், அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் சரவணன் என்பவர், இப்பகுதி பட்டா நிலம் என்றும், மீண்டும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டக்கூடாது எனக்கூறி எதிர்ப்பு தெரிவித்தார். இதனால், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

Tags : Veppanahalli ,Ariyanapalli ,Krishnagiri district ,
× RELATED அம்மன் கோயில்களில் ஆடி வெள்ளி வழிபாடு