×

தீ வைத்து ஸ்கூட்டர் எரிப்பு: போலீசில் புகார்

 

விக்கிரவாண்டி, ஜூலை 31: வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டருக்கு தீ வைத்து எரித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் பெரியதச்சூர் அருகே உள்ள வி.பாஞ்சாலம் கிராமத்தை சேர்ந்தவர் கீதா(38). இவரது கணவர் கமலக்கண்ணன்(40). இவர் சென்னையில் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். கீதா தனது 3 குழந்தைகளுடன் வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலையில் வீட்டின் முன் நிறுத்தியிருந்த கீதாவின் ஸ்கூட்டரை மர்ம நபர் தீ வைத்து எரித்துள்ளார். இதில் பைக் முழுவதும் எரிந்து நாசமானது. இது குறித்து கீதா கொடுத்த புகாரின்பேரில் பெரியதச்சூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Vikravandi ,Geetha ,V. Panchalam village ,Periyathachur ,Villupuram district ,Kamalakannan ,Chennai… ,
× RELATED மதுபாரில் தகராறு:  வாலிபரை தாக்கிய 2 பேர் கைது