- சேலம்
- மாவட்ட கலெக்டர்
- இலம் பகவத்
- சேலம் அரசு மருத்துவமனை
- விபத்து மற்றும் அவசர சிகிச்சை துறை
- மாவட்ட முதன்மை தலையீட்டு சேவைகள் மையம்
- சிகிச்சை அலகு
சேலம், ஜூலை 30: சேலம் அரசு மருத்துவமனையில் மாவட்ட கலெக்டர் இளம்பகவத் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு சேவைகள் மையம், இயன்முறை சிகிச்சை பிரிவு, செயல்முறை சிகிச்சை, கண் பரிசோதனை அறை, மருந்து கிடங்கு, ஆய்வகம் ஆகியவற்றை பார்வையிட்டு மருத்துவ பயனாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.தொடர்ந்து, புற்றுநோய் சிகிச்சை துறையில் மருத்துவக் கருவிகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் பயன்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், ரத்த மையம், ரத்த சுத்திகரிப்பு பிரிவுகளை பார்வையிட்டார்.
இதேபோன்று மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சிகிச்சை பிரிவில் கர்ப்பிணிகள் பரிசோதனை அறை, புறநோயாளிகள் பிரிவு, பிரசவ அறை, பச்சிளம் குழந்தைகள் சிறப்பு சிகிச்சை பிரிவு, மருந்தகம், ஸ்கேன் செய்யும் அறை, மகப்பேறு தீவிர சிகிச்சை பிரிவு ஆகியவற்றை பார்வையிட்டார். மருத்துவமனையில் ரூ.20 கோடி மதிப்பில் 4 தளங்களுடன் 4,933.80 சதுர மீட்டர் பரப்பளவில் 50படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு கட்டிடம் கட்டப்பட்டு வரும் பணியினை கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது டீன் தேவிமீனாள், கண்காணிப்பாளர் ராஜ்குமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தியாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.
