- NEET
- திமுகா
- ஸ்டாலின்
- கம்யூனிஸ்ட்
- Nallakannu
- சென்னை
- துணை
- அமைச்சர்
- நல்லகனு
- ஆர்.
- கரங் அறக்கட்டளை
- வன்னாரபெட் வீரகுட்டி தெரு
- நகர் சட்டமன்றத் தொகுதி
சென்னை: நீட் தேர்வை முதன்முதலில் எதிர்த்தது போராடியது திமுக தான் என்று கம்யூனிஸ்ட் தலைவர் நல்லக்கண்ணு சிலை திறப்பு விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசினார். ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வண்ணாரப்பேட்டை வீராகுட்டி தெருவில் இயங்கி வரும் உதவும் கரங்கள் அறக்கட்டளை சார்பில் சுதந்திரப் போராட்ட தியாகியும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவருமான நல்லகண்ணு சிலை திறப்பு விழா நடந்தது. இந்த விழாவில் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, சிலையை திறந்து வைத்தார்.
பின்னர், அம்மாச்சி என்ற நூலை வெளியிட, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன் பெற்று கொண்டார். அதைத்தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: டெல்லியில் நீட்டுக்கு எதிராக இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். அவர்கள் தற்போது தான் இந்த போராட்டத்தை நடத்துகிறார்கள். ஆனால் திமுகவோ இதைக் கொண்டு வந்தபோது எதிர்த்து அன்று முதல் இன்று வரை போராடி வருகிறது.
நமது தலைவர் சட்டமன்றத்தில் நீட்டை ரத்து செய்ய கோரி தீர்மானம் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்கு கொடுத்தார். ஆனால் அதனை கிடப்பில் வைத்தார். அதை எதிர்த்து நமது தலைவர் உச்சநீதி மன்றம் வரை சென்று போராடி வருகிறார். நீட்டுக்கு எதிராக ஆர்ப்பாட்டம், கையெழுத்து இயக்கம், மனித சங்கிலி நடத்தியுள்ளோம். தமிழ்நாட்டின் உரிமைக்கு எதிராக எது நடந்தாலும் திமுகவும் கம்யூனிஸ்ட் இணைந்து செயல்படும். கலைஞர் கம்யூனிஸ்ட் பற்று அதிகம் உள்ளவர்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன், வடசென்னை திமுக மாவட்ட செயலாளர் ஆர்.டி.சேகர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஐட்ரீம் மூர்த்தி, எபினேசர், மற்றும் இளைய அருணா, வழக்கறிஞர் மருது கணேஷ், கருணா, பகுதி செயலாளர்கள் லட்சுமணன், ஜெபதாஸ் பாண்டியன், வ.பெ.சுரேஷ், செந்தில்குமார், அறக்கட்டளை நிர்வாகி பப்பு, திமுக வட்ட செயலாளர் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், அறக்கட்டளை நிர்வாகிகள், திமுக தோழர்கள் பெரும் அளவில் கலந்து கொண்டனர்.
